KVF Logo Full (1)

49th Chennai Book Fair-Stall No: 659

✨ The wait is finally over! ✨ Karna Vidya Foundation proudly invites you to the launch of “Uli Arangu”, our exclusive stall at the 49th Chennai Book Fair 📚 Be there on 8th Jan 2026 5:30 Pm! 📍 Stall No: 659 Step into a world where stories break barriers—discover inspiring writers with visual impairments and explore how accessible technology empowers inclusive reading and writing. 🌟 Don’t miss this unique experience. Visit us and be inspired! 🌟

49-வது சென்னை புத்தகக் கண்காட்சி-அரங்கு எண் 659

"அகத்தின் எழுத்துக்களை வாசித்து பார்க்கவும், அறிவின் தேடலை விசாலமாக்கவும் இதோ ஒரு உன்னதமான வாய்ப்பு!
49-வது சென்னை புத்தகக் கண்காட்சியில், தடைகளைத் தகர்த்தெறிந்த பார்வை மாற்றுத்திறனாளி எழுத்தாளர்களின் வியக்கத்தக்க படைப்புகளையும், இன்றைய சமகால கணினி சார் தொழில்நுட்பங்களின் விஸ்வரூபத்தையும் நீங்கள் ஒரே இடத்தில் கண்டறியலாம்.
இதற்காக ஒன்பதாவது பாதையில், அரங்கு எண் 659-ல் 'உளி அரங்கு' உங்களுக்காகவே பிரத்யேகமாகத் தயாராக உள்ளது. வரும் ஜனவரி 8, 2026 முதல் ஜனவரி 21, 2026 வரை, தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை இந்த அறிவுத் திருவிழா நடைபெறுகிறது.
'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்' என்ற உயரிய சிந்தனைக்கு உயிர் கொடுக்கும் வகையில், அகத்தின் ஒளியால் உருவான எழுத்துக்களை வாசிக்கவும், நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும் அனைவரும் வருகை தாருங்கள்; அறிவின் தேடலைப் பெற்றுக்கொள்ளுங்கள்!"

வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளுக்கான சேர்க்கை-2026–2027 Course Details

அனைவருக்கும்
கர்ண வித்யா அமைப்பின் அன்பு வணக்கம்!
கர்ண வித்யா குழுமம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வை உடையோர் தங்களின் திறன்களை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்திக் கொள்ளும் வகையில், பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, 2026–2027 கல்வியாண்டில்
சென்னை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில்
வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பை தொடங்கவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவோருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியின் நோக்கம்:
தனியார் மற்றும் அரசுத் துறைகளில் தரவு உள்ளீட்டு உதவியாளர் பணிக்குத் தேவையான வேலைவாய்ப்பு சார்ந்த திறன்களை வழங்குதல்.
பயிற்சி உள்ளடக்கம்:

  • தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சுப் பயிற்சி
  • கணினி அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி
  • வேலைவாய்ப்பு சார்ந்த திறன்கள் (Employability Skills)
  • கைபேசியில் பயன்படுத்தப்படும் OCR பயன்பாடுகள்
    குறிப்பு:
    விருதுநகர் மாவட்டத்தில் சேரும் மானவ மானவிர்க்கு
    உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி
    ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக ஏற்பாடு செய்து தரப்படும்
    சென்னை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் விடுதி வசதிகளை தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
    சென்னை மாவட்டம் பயிற்சியின் விவரம்
    இடம் கர்ண வித்யா அமைப்பு,
    5வது தளம், RR Tower–2,
    கிண்டி தொழிற்பேட்டை,
    சென்னை.
    பயிற்சி காலம்: 6 மாதங்கள்
    பயிற்சி முறை: நேரடி வகுப்பு
    பயிற்சி நாட்கள்: திங்கள் முதல் வெள்ளி வரை
    பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
    தகுதி:
  • முழுப் பார்வையற்றோர் (Total Blindness) அல்லது குறைப் பார்வை உடையோர் (Low Vision)
  • ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
  • வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
    மொத்த இடங்கள்: 15
    விருதுநகர் மாவட்டம் பயிற்சியின் விவரம்
    இடம்: விருதுநகர் மாவட்டம் கலசலிங்கம் பல்கலைக்கழகம்
    பயிற்சி முறை: நேரடி வகுப்பு
    பயிற்சி நாட்கள்: திங்கள் முதல் சனி வரை
    பயிற்சி நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
    மொத்த இடங்கள்: 15
    பயிற்சி தொடங்கும் நாள்: 16/02/2026
    விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/02/2026
    விண்ணப்பிக்கும் முறை
    கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ நிரப்பவும்:
    https://forms.gle/8aSuDzNbq25dyabd6
    படிவத்தை நிரப்ப இயலாதவர்கள் தொடர்பு கொள்ள:
    திரு. ஆனந்தராஜ் – 9176236098
    பார்வையற்ற மற்றும் குறைப் பார்வை உடைய நண்பர்கள், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களது எதிர்காலத்தை உறுதியானதாக மாற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    இப்படிக்கு,
    கர்ண வித்யா அமைப்பு